தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - மகிழ்ச்சியில் மாணவர்கள்


தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - மகிழ்ச்சியில் மாணவர்கள்


அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பள்ளி மேலாண்மைக் குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 20.03.2022 ஞாயிற்றுக் கிழமையன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டம் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடத்தப்பட உள்ளது.

இக்கூட்டத்தில் பெற்றோர்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு அமைப்பு, அதன் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம், பெற்றோர்களின் பங்கு மற்றும் அடுத்து நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு நிகழ்வில் பெற்றோர்கள் கலந்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் ஆகியவற்றை, தலைமை ஆசிரியர்கள் எளிய முறையில் எடுத்துரைக்க உள்ளனர்.

இதனால், தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் 20.03.2022 ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கு வருகை தர உள்ளனர். எனினும், அன்றைய தினம் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை.
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு வர வேண்டிய சூழல் உள்ளதால், சனிக்கிழமையான நாளை, தொடக்க நிலை முதல் மேல்நிலை வரை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog