நள்ளிரவில் பிரபல இயக்குனருக்கு போன் செய்த ரஜினி..திகைத்து போன இயக்குனர்..!


நள்ளிரவில் பிரபல இயக்குனருக்கு போன் செய்த ரஜினி..திகைத்து போன இயக்குனர்..!


நடிகர் ரஜினிக்கு ரசிகர்கள் ஏராளம் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே. அவரின் படங்களுக்கும், அவரின் நடிப்பிற்கும் ரசிகர்கள் இருப்பதைப்போல அவரின் குணத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
சினிமாவில் சாதிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மனம்விட்டு பாராட்டுவார்ரஜினி.

புதுமுக இயக்குனர், புதுமுக நடிகர், பெரிய நட்சத்திரங்கள் என வித்யாசம் பார்க்காது யாராக இருந்தாலும் அவர்களை மனதார பாராட்டுவார் ரஜினி. அந்த வகையில் நடிகர் ரஜினி சமீபத்தில் இயக்குனர் சீனு ராமசாமியை மனதார பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கி ரசிகர்களை ஈர்த்தவர் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை போன்ற தரமான படங்களை இயக்கிய சீனு ராமசாமி தற்போது விஜய் சேதுபதியை வைத்து மாமனிதன் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

சீனு ராமசாமி விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தைப்பற்றி சீனு ராமசாமி பேசுகையில், மாமனிதன் படத்தைப்பார்த்துவிட்டு நடிகர் ரஜினி அவர்கள் எனக்கு நள்ளிரவு 3 மணிக்கு போன் செய்து பாராட்டினார்.
நான் பதிலுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து போனேன். உங்கள் பாராட்டு எனக்கு தெம்பை அளித்துள்ளது என்றேன்.

மேலும் என்னை சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்கள் பாராட்டியது அந்நேரத்தில் யாரிடமாவது சொல்லவேண்டும் என்று நினைத்து தூங்கிக்கொண்டிருந்த என் மனைவியை எழுப்பி என் போனை காண்பித்து ரஜினி என்னை பாராட்டினார் என்றேன். மேலும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog