சொகுசு கார் விபத்து! மூன்று பேர் மரணம்!1226978673


சொகுசு கார் விபத்து! மூன்று பேர் மரணம்!


சென்னை வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இன்று (அக்டோபர் 18) அதிகாலை கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற சொகுசு கார், வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் அதிவேகமாக சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து மாங்காடு அருகே மலையம்பாக்கம் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது கார் பள்ளத்தில் விழுந்து, அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரில் பயணம் செய்த கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ரமேஷ் பாபு, அவரது சகோதரர் சுரேஷ் பாபு மற்றும் சுதாகர் ஆகியோர் உயிரிழந்தனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த வெங்கடேசன், ராஜவேலு ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணையில், வேடந்தாங்கலைச் சேர்ந்த ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு இருவரும் தொழில் அதிபர்கள். இவர்களுக்கு சொந்தமான ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்கள் வேடந்தாங்கலில் இயங்கி வருகிறது. வாகனங்களை பழுது நீக்க சென்னையிலிருந்து மெக்கானிக்கை அழைத்துச் சென்றபோது விபத்து நேர்ந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை பகுதியில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதனால் இந்த பகுதியில் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும், விபத்து கவன குறியீடுகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog